ஆந்திரா: ஆந்திரா மாநிலம், பிரகாசம் மாவட்டம், பொதிலகுண்டபள்ளே கிராமத்தைச் சேர்ந்த 'மண்டல சக்கரதாரா வெங்கடசுப்பையா' என்பவர் செய்த சான்றிதழ் மோசடி ஒன்று 32 ஆண்டுகளுக்குப் பிறகு அம்பலமாகியுள்ளது. வெங்கடசுப்பையா பட்டியலினத்தைச் சேர்ந்தவர் அல்ல. ஆனால், கடந்த 1991ஆம் ஆண்டு தான் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்று கூறி, போலியான ஆவணங்களை சமர்ப்பித்து சாதிச்சான்றிதழ் பெற்றுள்ளார். அதைப் பயன்படுத்தி ரயில்வேயில் வேலையும் வாங்கியுள்ளார்.
இவர் ரயில்வேயில் இத்தனை ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு தற்போது இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வெங்கடசுப்பையா தனது குழந்தைகளுக்கும் போலியான சாதிச்சான்றிதழை வாங்கியுள்ளார்.