தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை - புதுச்சேரி

புதுச்சேரியில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கழுத்தை அறுத்து கொலை செய்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை
காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை

By

Published : Jul 20, 2022, 2:29 PM IST

புதுச்சேரி:புதுச்சேரி திருபுவனை பகுதியில் உள்ள சன்னியாசிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த 18 வயது பெண் அரசு கலைக் கல்லூரியில் முதலமாண்டு படித்து வருகிறார். மாணவி தந்தையின் தங்கை மகனான இளைஞர் மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்தார். இதற்கு அம்மாணவி மறுப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த இளைஞர் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று(ஜூலை 19) மாலை மாணவி தனியார் பேருந்தில் இருந்து சன்னியாசிக்குப்பம் கடை வீதியில் இறங்கி வீட்டிற்கு செல்ல முற்பட்டபோது கத்தியுடன் மறைந்திருந்த அந்த இளைஞர் திடீரென மாணவியின் கழுத்து கை, கால் பகுதியில் சரமாரியாக வெட்டினார். இதில் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் மாணவி சரிந்தார். .உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததை பார்த்து இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான்.

பின்னர் மாணவியை மீட்டு மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். ஆனால் மாணவியை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து தகவல் அறிந்த திருபுவனை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கொலையாளியை தேடி வருகின்றனர்.அந்த இளைஞர் மீது, ஏற்கனவே திருவண்டார் கோயில் பகுதியில் உள்ள மதுபான கடையில் பாம் வீசிய வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:திருமணத்திற்கு வற்புறுத்திய காதலன் - ஆள் வைத்து தாக்குதல் நடத்திய காதலி

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details