தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 2, 2021, 8:02 PM IST

ETV Bharat / bharat

சரக்குப் போக்குவரத்து வழியே ரூ. 11,788 கோடியை ஈட்டிய இந்திய ரயில்வே!

டெல்லி : பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறை கடந்த 2020ஆம் ஆண்டு சரக்குப் போக்குவரத்து வழியே ரூ. 11 ஆயிரத்து 788 கோடியே 11 லட்சத்தை ஈட்டியுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

சரக்குப் போக்குவரத்து வழியே ரூ. 11,788 கோடியை ஈட்டிய இந்திய ரயில்வே!
சரக்குப் போக்குவரத்து வழியே ரூ. 11,788 கோடியை ஈட்டிய இந்திய ரயில்வே!

இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவிட்-19 தொடர்பான சவால்கள் இருந்த போதிலும், ஒரு குறிக்கோளின் அடிப்படையில் இயங்கிய, இந்திய ரயில்வே கடந்த ஆண்டு சரக்குப் போக்குவரத்தை விட இந்த ஆண்டு அதிக வருவாய் ஈட்டி குறிப்பிடத்தக்க மைல் கல்லை எட்டியுள்ளது.

சரக்குப் போக்குவரத்து வழியே ரூ. 11,788 கோடியை ஈட்டிய இந்திய ரயில்வே!

கடந்த 2019ஆம் ஆண்டின் சரக்குப் போக்குவரத்து வருவாயைவிட 2020ஆம் ஆண்டில் அதிக வருவாயை ரயில்வே துறை ஈட்டியுள்ளது. குறிப்பாக, 2020ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் 118.13 மில்லியன் டன்கள் மொத்தமாக சரக்கு ஏற்றியுள்ளது. அதற்கு முந்தைய 2019ஆம் ஆண்டு 108.84 மில்லியன் டன்கள் சரக்கு ஏற்றியது. அதாவது 2019ஆம் ஆண்டைவிட 9.29‬ மில்லியன் டன்கள் அதிகமாகும். இதன் மூலம் ரூ. 11 ஆயிரத்து 788 கோடியே 11 லட்சத்தை ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு ஈட்டிய தொகையை விட ரூ. 757 கோடியே 74‬ லட்சம் அதிகமாகும்.

அதேபோல, 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான சரக்கு கையாள்வதன் அளவு மற்றும் போக்குவரத்தில் இந்திய ரயில்வே துறை தொடர்ந்து உச்சத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தை விட 8.54 விழுக்காடு அதிகமாகும்.

கோவிட்-19 பரவல் நெருக்கடியை செயல்திறனை மேம்படுத்துவதற்கான வாய்ப்பாக ரயில்வே துறை பயன்படுத்தியது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க :பசி கொடுமை: கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details