தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஊரடங்கு: புதுச்சேரி சுற்றுலாப் பகுதிகளில் 50% பொதுமக்கள் கூடுவதற்கு அனுமதி - புதுச்சேரி மாநில செய்திகள்

புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சுண்ணாம்பாறு படகு குழாம் போன்ற சுற்றுலாப் பகுதிகளில், 50 விழுக்காடு பொதுமக்கள் கூடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

By

Published : Jul 15, 2021, 10:46 PM IST

புதுச்சேரி: அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் இருந்தது. தொற்று குறைந்து வருவதால், கூடுதல் தளர்வுகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதோடு, மேலும் ஜூலை 31ஆம் தேதி நள்ளிரவு வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுகிறது.

இதன்படி, தினசரி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர பொது முடக்கம் அமலில் இருக்கும்.

பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்கு தடை:

அரசியல், சமூக நிகழ்வுகள், பொழுதுபோக்கு தொடர்பான நிகழ்வுகளுக்குத் தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது. அனைத்து அரசுத்துறை, தனியார் துறை அலுவலகங்கள் இயங்கலாம்.

அனைத்துவிதக் கடைகள், வணிக நிறுவனங்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை, குளிர்சாதன வசதியின்றி இயங்க அனுமதி அளிக்கப்படும். காய்கறி மற்றும் பழக்கடைகள் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்படும்.
மதுக்கூடங்களுக்கு அனுமதி

மேலும் அனைத்துவித உணவகங்கள், தங்கும் விடுதிகள், மதுக்கூடங்களுடன் கூடிய விடுதிகளில் இரவு 9 மணி வரை 50 விழுக்காடு பேர் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்படும். சில்லறை மதுக்கடைகள், சாராயம் மற்றும் கள்ளுக்கடைகள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வழக்கம்போல் இயங்கலாம்.

கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி

பூங்காக்கள், கடற்கரை சாலைகளில் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் இரவு 9 மணி வரை பக்தர்கள் தரிசனம், பூஜைகள் செய்ய அனுமதி அளிக்கப்படும். நீண்ட நாள்களுக்குப் பிறகு, புதுச்சேரி சுற்றுலாத் தலங்கள் இயங்க அனுமதி அளிக்கப்படுகின்றது.

சுற்றுலாத் தலங்களுக்கு அனுமதி

சுற்றுலாத் தலமான சுண்ணாம்பாறு படகு குழாம் போன்ற சுற்றுலாப் பகுதிகளில், 50 விழுக்காடு பொதுமக்கள் கூடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details