தமிழ்நாடு

tamil nadu

மருத்துவமனையில் தீ விபத்து: 5 கரோனா நோயாளிகள் உயிரிழப்பு!

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் ராஜதானி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து கரோனா நோயாளிகள் தீயில் கருகி உயிரிழந்தனர்.

By

Published : Apr 18, 2021, 11:36 AM IST

Published : Apr 18, 2021, 11:36 AM IST

fire
தீ விபத்து

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள ராஜதானி மருத்துவமனையில் நேற்று மாலை, மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென, மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவு முழுவதும் பரவியுள்ளது. ஐசியுவில் 30-க்கும் மேற்பட்ட நபர்கள் சிகிச்சைப் பெற்றுவந்ததாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினரும், தீயணைப்புத் துறையினரும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஐசியுவில் சிக்கியிருந்த 29 நோயாளிகளைப் பத்திரமாக மீட்டு, மற்றொரு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இவ்விபத்தில் ஐந்து கரோனா நோயாளிகள் தீயில் கருகி உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்துக் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:கிணறு அருகே மது அருந்திக் கொண்டிருந்த இளைஞர் பிணமாக மீட்பு!

ABOUT THE AUTHOR

...view details