ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் சிதாபுராவில் உள்ள ஜெய்ப்பூர் கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 3 நாள் தெற்காசிய புவி அறிவியல் மாநாட்டில் மத்திய பெட்ரோலியம் மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "வளர்ச்சியடைந்து வரும் இந்திய பொருளாதாரத்தை கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலை உயர்வுகளிலிருந்து பாதுகாக்கும் விதமாக, உலக எரிசக்தி சவால்களை இந்திய அரசு சிறப்பாக எதிர்கொண்டு வருகிறது.
இந்தியாவில் நாளொன்றுக்கு 5 மில்லியன் பீப்பாய்கள் பெட்ரோலியம் பயன்படுத்தப்படுகிறது. இது தற்போது 3 சதவீதம் அதிகரித்து வருகிறது. இது உலக சராசரியில் ஒரு சதவீதத்தை விட அதிகமாகும். பெட்ரோலில் எத்தனால் கலப்பு சதவீதம் 2013ஆம் ஆண்டில் 0.67 சதவீதம் திட்டமிட்டது. 2022ஆம் ஆண்டு மே மாதத்தில் 10 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது 2.7 மில்லியன் டன் கார்பன்டை ஆக்சைடு உமிழ்வைக் குறைத்திருக்கிறது. இது சுற்றுச்சூழலுக்கு மிகவும் நல்லதாகும்.