தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 3, 2020, 6:07 PM IST

ETV Bharat / bharat

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து குழந்தை உள்பட இருவர் உயிரிழப்பு!

லக்னோ: சம்பல் மாவட்டத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர். 6 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

house collapses
house collapses

உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டம் ஹயாத் நகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டின் சுவர் நேற்றிரவு (நவ. 02) எதிர்பாராத வகையில் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர். 6 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இது தொடர்பாக ஹயாத் நகர் காவல் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த காவல் துறையினர் விபத்துக்குள்ளானவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் காயமடைந்த 6 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நயீம் ஜஹான் (36), மோனிஷ் (5) ஆகியோர் உயிரிழந்ததாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:சுவர் இடிந்து நாதஸ்வர கலைஞர் உயிரிழப்பு: 3 நாள்களுக்குப் பின் அழுகிய நிலையில் கண்டுபிடிப்பு

ABOUT THE AUTHOR

...view details