ஸ்ரீநகர்:ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மாவட்டத்திலுள்ள முகாமிலிருந்து இரண்டு எல்லைப் பாதுகாப்பு படையினர் காணாமல் போனதாக கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, சுந்தர்பானி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு படையினர் இருவரும் நேற்று மாலை காணமால்போனதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.