தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 24, 2021, 9:23 AM IST

ETV Bharat / bharat

'ஆறு விரல் விநோதம்' தனி அடையாளத்தை கொண்ட ஹரியானா குடும்பம்!

பானிபட்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 175 நபர்களுக்கு கை அல்லது கால்களில் கூடுதல் விரல் இருந்து வரும் சம்பவம் விநோதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பானிபட்
பானிபட்

பிறக்கும்போது ஒரு சிலருக்கு கை அல்லது கால்களில் கூடுதலாக ஒரு விரல் இருப்பது அரிது. இத்தகைய மனிதர்களை பலரும் ஆச்சரியாக பார்த்து வருகிறார்கள். ஆயிரத்தில் ஒருவருக்கு இத்தகைய பிறப்பு குறைப்பாடுகள் இருக்கலாம் எனக் மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால், ஹரியானா மாநிலம் பானிபட்டில் பல தலைமுறைகளுக்கு இந்த கை விரல் பிறப்பு குறைபாடு தொடருவது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அங்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 175 நபர்களின் வலது கை அல்லது காலில் கூடுதல் விரல் இருக்கிறது. கிராமம் முழுவதும் அந்த குடும்பத்தினர் தான் ஹாட் டாபிக்.

இது குறித்து குடும்ப தலைவரான சுக்பிர் கூறுகையில், "கை அல்லது கால்களில் ஆறு விரல் கொண்ட முதல் தலைமுறை நாங்கள் அல்ல. எனது தாத்தாவுக்கும் கையில் ஆறு விரல்கள் இருந்தன. மக்கள் இதை நோயாக பார்க்கின்றனர். ஆனால், நாங்கள் இதனை கடவுளின் கிருபையாக தான் பார்க்கிறோம்" எனத் தெரிவித்தார்.

சுவாராஸ்யமாக இந்தக் குடும்பத்தின் பெண்களுக்கும் ஆறு விரல்கள் கொண்ட குழந்தைகளே பிறக்கின்றனர்.

இது குறித்து டாக்டர் சுக்பீர் கவுர் கூறுகையில், "ஆறாவதாக கை அல்லது காலில் விரல் இருப்பது, மிகவும் பொதுவான பிறப்பு குறைபாடு தான். இதனை மருத்துவ ரீதியாக 'பாலிடாக்டிலி' என அழைக்கிறோம். இதனை சரிசெய்ய வேண்டுமென்றால், அறுவை சிகிச்சை மட்டும் தான் ஒரே வழி. சாதாரணமாக, கைகளில் மூன்று இடங்களில் கூடுதல் விரலை பார்த்திட முடியும்.

  • சிறிய விரல் பக்கத்தில் - மிகவும் பொதுவானது
  • கட்டைவிரல் பக்கத்தில், இதனை கட்டைவிரல் நகல் என்றும் அழைக்கப்படுகிறது - ஒரு சிலருக்கு மட்டுமே
  • கையின் நடுவில் - மிகவும் அரிதானது.

இந்நிலையில், சாதாரணமான பிறவி குறைபாடு மட்டுமே. ஆயிரத்தில் ஒருவருக்கு இத்தகைய பாதிப்புகள் கண்டறியப்படுகிறது. குறிப்பாக ஆப்பிரிக்கா, அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு கூடுதலாக சிறிய விரல் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

ABOUT THE AUTHOR

...view details