தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் 1,598 பேருக்கு கரோனா உறுதி

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,598 பேர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

By

Published : May 15, 2021, 2:30 PM IST

covid-19
covid-19

புதுச்சேரி மாநிலத்தில் கரோனா அதிவேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 139 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

கரோனா பாதிப்பு விவரம்:

  • புதுச்சேரி- 1,295 பேர்
  • காரைக்கால் -260 பேர்
  • ஏனாம்- 103 பேர்
  • மாஹே- 40 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது மாநிலத்தில் 17 ஆயிரத்து 228 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 62 ஆயிரத்து 198 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 24 மணி நேரத்தில் மட்டும் 1,744 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 19 பேரும், காரைக்காலில் ஒருவரும் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,199 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை புதுச்சேரி மாநிலத்தில் மொத்தமாக 82 ஆயிரத்து 545 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா பாதிப்பு

புதுச்சேரியில் முதலாவது மற்றும் இரண்டாவது டோஸ் முறையே இதுவரை 2 லட்சத்து 27 ஆயிரத்து 935 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details