தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கழுத்து வளைந்த பாகிஸ்தான் சிறுமிக்கு டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் இலவச அறுவை சிகிச்சை - மறுவாழ்வு பெற்ற சிறுமி! - பாகிஸ்தான் சிறுமிக்கு மறுவாழ்வு அளித்த இந்திய மருத்துவர்கள்

கழுத்து வளைந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கு, டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் சிக்கலான அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டது. இதையடுத்து சிறுமி மறுவாழ்வு பெற்று ஆரோக்கியமாக இருக்கிறார்.

Pakistani
Pakistani

By

Published : Jul 28, 2022, 5:50 PM IST

டெல்லி: பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சேர்ந்த அஃப்ஷின்(12) என்ற சிறுமி, 10 மாத குழந்தையாக இருந்தபோது நடந்த விபத்தில் அவளது கழுத்து 90 டிகிரி வளைந்துவிட்டது. இதை சரிசெய்ய பெற்றோர் உள்ளூர் மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றனர். ஆனால், சரி செய்ய முடியவில்லை. கழுத்து வளைந்துவிட்டதால், தனது அடிப்படை வேலைகளைக் கூட சிறுமியால் செய்ய முடியவில்லை. சாதாரண குழந்தைகளைப் போல பள்ளி செல்லவோ, விளையாடவோ முடியாமல் பாதிக்கப்பட்டிருந்தார்.

நாட்கள் செல்ல செல்ல சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமாவிட்டது. பெருமூளை வாத நோயும் ஏற்பட்டது. இந்த நிலையில், சிறுமியின் தாயார் அவரை மருத்துவ முகாம் ஒன்றுக்கு அழைத்துச் சென்றார். அங்கு சிறுமியின் வித்தியாசமான நோய் மற்றும் மருத்துவ நிலை, மருத்துவர்கள் - மக்கள் மத்தியில் கவனம் பெற்றது. சமூக வலைதளங்களிலும் வெளியானது.

இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் நடிகர் அஹ்சன் கான், சிறுமி அஃப்ஷினின் நோய் குறித்து முகநூலில் பகிர்ந்து, சிறுமிக்கு உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இந்த புகைப்படம் டெல்லி அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து மருத்துவர்கள் சிறுமிக்கு இலவச சிகிச்சை அளிக்க முடிவு செய்து, சிறுமியை டெல்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனைக்கு வரவழைத்தனர். பிறகு பல்வேறு அறுவை சிகிச்சைகள் மூலம் சிறுமியின் கழுத்தை நேராக்கியுள்ளனர். பல மாதங்களாக சிகிச்சை செய்யப்பட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில்," சிறுமிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மிகவும் சிக்கலானது. சிறுமியின் கழுத்தை நேராக்குவதற்கு முன்பு நான்கு சிக்கலான அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியிருந்தது. இந்த அறுவை சிகிச்சையில் இதயமும், நுரையீரலும் பாதிக்கப்படும் நிலை இருந்தது. இதற்கு மத்தியில் கடந்த பிப்ரவரி மாதத்தில் சிறுமிக்கு முக்கிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்காக சமூக வலைதளங்கள் மூலம் நிதி திரட்டப்பட்டது.

அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக முடிந்த நிலையில், ஆறு மாதங்களாக சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது சிறுமி முற்றிலும் ஆரோக்கியமாக இருக்கிறார். சரியான நேரத்தில் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், சிகிச்சை சாத்தியமானது" என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க:சந்தால் மற்றும் பஷ்டூன்: இரண்டு பழங்குடியின பெண்களின் மைல்கல்லுக்கும் அப்பாற்பட்ட கதை

ABOUT THE AUTHOR

...view details