கோவிட்-19 பெருந்தொற்று பலருக்கும் சவாலான சூழலை ஏற்படுத்தியிருந்தாலும், பல நம்பிக்கை கதைகளும் ஆங்காங்கே நிகழ்த்திதான் இருக்கின்றன. உத்தரப் பிரதேச மாநிலம், மீரட் அருகேயுள்ள பாக்பேட் பகுதியைச் சேர்ந்த நூறு வயது பாட்டி சார்தார் கவுர் கோவிட்-19 பாதிப்பிலிருந்து வெற்றிகரமாக மீண்டு வந்துள்ளார்.
அங்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் கடமை தவறாமல் வாக்கு செலுத்திவிட்டு வந்த சர்தார் பாட்டிக்கு, அடுத்த சில நாள்களில் கோவிட்-19 தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாட்டிக்கு மட்டுமல்லாது, அவரது குடும்பத்தினர் ஐந்து பேருக்கும் தொற்று பரவியுள்ளது.
பாட்டிக்கு பாதிப்பு ஏற்பட்டதால் அவரது குடும்பத்தினர் பெருந்துயரில் ஆழ்ந்துள்ளனர். ஆனால், பாட்டியோ தன்னம்பிக்கையை கைவிடாமல் மன உறுதியுடன் பெருந்தொற்றை எதிர்கொண்டுள்ளார்.