தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 29, 2021, 8:56 PM IST

Updated : Apr 29, 2021, 9:04 PM IST

ETV Bharat / bharat

ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பும் போது துப்பாக்கிச் சூடு: வங்கி ஊழியர் உயிரிழப்பு!

ஹைதராபாத்: ஹெச்.டி.எப்.சி வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பிக் கொண்டிருந்த வங்கி ஊழியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், வங்கி ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Covid-19
Covid-19

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள குகட்பல்லி ஹெச்.டி.எப்.சி வங்கியின் ஏடிஎம் மையத்தில், வழக்கம் போல வங்கி ஊழியர்கள் அலி பேஜ், ஸ்ரீனிவாஸ் பணம் நிரப்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இதை சற்றும் எதிர்பாராத ஊழியர்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

துப்பாக்கிச் சூடு நடந்த ஏடிஎம் மையம்

இதைப் பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர்கள் பணத்துடன் தப்பியோடினர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகாமையிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அலி பேஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஸ்ரீனிவாஸ் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திலிருந்து இரண்டு தோட்டாக்களும், புல்லட் லாக்கும் கிடைத்துள்ளன.

Last Updated : Apr 29, 2021, 9:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details