திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நியூடவுன் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் இன்று (செப்.29) கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் பகுதியில் உள்ள காலபைரவர் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார்.
சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் வாணியம்பாடி நோக்கி வந்து கொண்டிருந்தபோது, நாட்றம்பள்ளி அடுத்த பையனப்பள்ளி சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் டீ குடிப்பதற்காகச் சென்றுள்ளனர்.