சென்னை:சென்னையை அடுத்த சேலையூர், கோட்டூர்புரம், சைதாப்பேட்டை மற்றும் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை என பல்வேறு காவல் நிலையங்களில், இரண்டு கொலை மற்றும் 25 கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த சோத்துப்பானை மணிகண்டன்(33)எ ன்னும் பிரபல ரவுடி இன்று தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
போதை ஆசாமி கைது:இதனைத் தொடர்ந்து, சென்னை எம்.ஜி.ஆர் நகர், மேற்கு ஜாபர்கான்பேட்டையில் பள்ளி ஒன்றின் அருகே போதை மாத்திரை விற்பனை நடப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில், போலீசார் விரைந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகப்படும்படி ஆட்டோவில் அமர்ந்து இருந்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். பின் அவர்களிடம் நடத்திய விசரணையில், அவர்கள் அதே பகுதியை சேர்ந்த கணேசன்(37), விக்ரம்(28), விஷ்வா(21)சஞ்சய்(22) மற்றும் ஆதம்பாக்கத்தை சேர்ந்த கலிதீர்த்தபெருமாள்(26) என்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவர்களது ஆட்டோவில் போதை மாத்திரைகள் மற்றும் சிரஞ்சுகள் பதுக்கி வைத்து இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.