மதுரை: மதுரை மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் (Ultrasound Scan) இயக்க பணியாளர்கள் நியமனம் செய்ய உத்தரவிட கோரிய வழக்கில், போதிய பணியாளர்கள் நியமனம் செய்வது குறித்து தமிழக சுகாதாரத் துறையின் முதன்மைச் செயலர், பொது மருத்துவ இயக்குநரகத்தின் இயக்குநர் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் இயக்குவதற்கான பணியாளர்கள் நியமனம் செய்ய உத்தரவிட கோரி, மதுரையைச் சேர்ந்த வெரோனிக்கா மேரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் பல கோடி ரூபாய் செலவில் இயந்திரங்கள் வாங்கி அதனை இயக்குவதற்கு உரிய பணியாள்கள் நியமனம் செய்யாவிட்டால் அதன் பயன் என்ன? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரையைச் சேர்ந்த வெரோனிக்கா மேரி மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு, “மதுரை மாவட்டத்தில் 13 பகுதிகளில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் இயங்கி வருகின்றன. இந்த பகுதியில் உள்ள கர்ப்பிணிகள், குழந்தைகள் நலம் போன்ற முக்கியமான பணிகள் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே செய்யப்படுகின்றன. எனவே, இங்குள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மிகவும் முக்கியமானது.
ஆரம்ப சுகாதார மையங்களில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் இல்லாததால், கர்ப்பிணிகள் நெடுந்தொலைவு பயணித்து மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் நிலை உள்ளது. இதனால், கிராமப்புற கர்ப்பிணிகள் பொருளாதாரரீதியாகவும், உடல் ரீதியாகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆரம்ப சுகாதார மையங்களில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் இயந்திரங்கள் இருக்க வேண்டும் என்பது விதி.