தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆருத்ரா மோசடி வழக்கு; திருவள்ளூர் கிளை இயக்குனர் ஜாமீன் கோரிய மனு குறித்து சிபிசிஐடி பதிலளிக்க உத்தரவு! - Aarudhra Scam Case - AARUDHRA SCAM CASE

Aarudhra Scam Case: ஆருத்ரா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட திருவள்ளூர் கிளை இயக்குனர் சசிகுமார் ஜாமீன் கோரிய மனு குறித்து சிபிசிஐடி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Aarudhra Scam Case
ஆருத்ரா மோசடி வழக்கு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 24, 2024, 6:57 PM IST

சென்னை: ஆருத்ரா கோல்ட் டிரேடிங் விவகாரத்தில், சுமார் ரூ.2,438 கோடி பொதுமக்களிடம் மோசடி செய்தது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இதுவரை 23 பேரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில், 25வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு, கைது செய்யப்பட்ட திருவள்ளூர் கிளை இயக்குனர் சசிகுமார், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், "நான் ஆருத்ரா நிறுவனத்தில் அலுவலகப் பணியாளராக இணைந்து, கிளைக்கு வருபவர்களிடம் இருந்து பணத்தை வாங்கும் பணியில் மட்டுமே ஈடுபட்டேன். விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு அளித்து வந்த நிலையில் நான் திடீரென கைது செய்யப்பட்டு, 200 நாட்களுக்கும் மேல் சிறையில் இருக்கிறேன். ஆதலால், எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" என மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி, பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டுமெனக் கோரிக்கை வைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணையை ஏப்ரல் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க:“கோவை கூலான ஏரியாவா?” குமுறும் கோவைவாசிகள்.. வாட்டி வதைக்கும் வெயிலின் நடுவே இளைப்பாறுவது எப்படி? - Coimbatore Heat Wave

ABOUT THE AUTHOR

...view details