சென்னை:இஸ்கான் சென்னை (அக்கரை) அமைப்பின் சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக கொண்டாடப்படும் 'மதுர மகோத்சவ (கீர்த்தன் விழா)' வருகிற ஜனவரி 17 முதல் 19 வரை நடைபெற உள்ளது. இந்த மூன்று நாள் விழா, தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். பக்தி யோகத்தின் பரிசுத்த அநுஷ்டானமான பகவான் கிருஷ்ணரின் திருநாமங்களைப் பாடுவதன் மூலம் ஆன்மீக அனுபவத்துக்கு வாய்ப்பு தருகிறது.
இந்த கீர்த்தன திருவிழாவில் மூத்த சந்நியாசிகளும் மற்றும் பல பக்தர்களும் இணைந்து கீர்த்தனம் புரிய உள்ளனர். கலியுக தர்மமாகிய ஹரி நாம ஸங்கீர்த்தனத்தின் மீதான பற்றுதலை எல்லாருக்கும் வழங்கும் பொருட்டு, குடும்பமாக கலந்து கொள்ளும் வகையில் இந்த விழா அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:முருகனுக்கு அரோகரா போட்ட அமெரிக்க பக்தர்கள்! வைரலாகும் வீடியோ!