தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.38 லட்சம் பணத்தை திருடிய ஏடிஎம் பாதுகாவலர்.. சென்னையில் நடந்தது என்ன? - ATM Security theft - ATM SECURITY THEFT

ATM VAN MONEY THEFT: சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் வங்கி ஏஎடிஎம் மெஷினில் பணத்தை லோடு செய்யும் போது, 38 லட்சம் பணத்தை திருடிய செக்யூரிட்டி கைது செய்யப்பட்டார்.

கைது தொடர்பான கோப்புப்படம் மற்றும் பணம் புகைப்படம்
கைது தொடர்பான கோப்புப்படம் மற்றும் பணம் புகைப்படம் (credit-ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 14, 2024, 3:49 PM IST

சென்னை:வேளச்சேரியில் உள்ள தனியார் வங்கி, நேற்று காலை முதல் ஏடிஎம் (ATM) இயந்திரத்திங்களில் பணத்தை லோடு செய்யும் பணியில் ஈடுப்பட்டிருந்துள்ளது. வேளச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 10 இடங்களில் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் லோடு செய்யப்பட்ட நிலையில், கடைசியாக ஊரப்பாக்கம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்துக்கு 5 பணப்பைகளுடன் பணம் லோடு செய்யச் சென்றுள்ளனர்.

அப்போது பணத்தை ஏடிஎம் இயந்திரத்தில் லோடு செய்யச் சென்ற வங்கி நபர்கள், வேனிலிருந்த ஐந்து பணப் பையில் உள்ள ரூபாய் 37.71 லட்சமும், அங்கு இருந்த செக்யூரிட்டி ஞானசேகரன் என்பவரும் காணாமல் போனதை அறிந்த வங்கி நபர்கள், வங்கி மேலாளர் அரவிந்தனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, அரவிந்தன் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், கொட்டிவாக்கத்தில் உள்ள செக்யூரிட்டி ஞானசேகரன் வீட்டிற்குச் சென்ற போலீசார், அவரது மனைவியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில், செக்யூரிட்டி ஞானசேகரன் திருடிய பணத்துடன் திருவான்மியூரில் தனியார் விடுதியில் தங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, தனியார் விடுதியில் சோதனை மேற்கொண்ட போலீசார், அங்கு பதுங்கி இருந்த ஞானசேகரனை கைது செய்து, அவரிடம் இருந்து சுமார் 37.71 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். மேலும், அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கொலையில் முடிந்த மதுபோதை தகராறு

ABOUT THE AUTHOR

...view details