பாட்னா: பீகார் மாநிலம், பாட்னா மாவட்டம், பார்ஹ் அருகே கங்கை ஆற்றின் உமந்தா காட் பகுதியில் இன்று (ஜூன்.16) 17 பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்து குறித்து தகவலறிந்ததும் மாநில பேரிடர் மீட்புப் படை உள்பட பல்வேறு மீட்புக் குழுவினர், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
இதில், 13 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நீரில் மூழ்கிய மேலும் 5 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கங்கை தசராவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள், புனித நீராட கங்கை ஆற்றுக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.