ETV Bharat / state

'சட்டம் ஒழுங்குக்கு பங்கமான கருத்துக்கு கடும் நடவடிக்கை' - கடம்பூர் ராஜு.. - thoothukudi latest news

தூத்துக்குடி: சட்டம் ஒழுங்கு சீர்கெடும் வகையில் கருத்து தெரிவித்தால் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

thoothukudi
thoothukudi
author img

By

Published : Jan 24, 2020, 5:38 PM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கிராம ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர்களுக்கான பயிற்சி கூட்டம் தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு செய்தி, விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்த போது

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "பொது மேடையில் ஓர் கருத்து முன்வைக்கப்படும் போது, அதற்கெதிராக மாற்றுக் கருத்து எழுப்பப்படுவது வழக்கம். அதுபோல் ரஜினிகாந்த் கருத்துக்கு எதிர் கருத்து தெரிவிக்கப்பட்டது. அது முடிந்து போன விஷயம். ஆனால் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் வகையில் பொது மேடையில் யாரவது பேசினால் அதனை அரசு பார்த்துக் கொண்டிருக்காது நிச்சயமாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: மகளுக்கு 2ஆவது திருமணம்: ரஜினிக்கு பெரியாரின் செயலை நினைவூட்டும் செல்லூர் ராஜு!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கிராம ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர்களுக்கான பயிற்சி கூட்டம் தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு செய்தி, விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்த போது

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "பொது மேடையில் ஓர் கருத்து முன்வைக்கப்படும் போது, அதற்கெதிராக மாற்றுக் கருத்து எழுப்பப்படுவது வழக்கம். அதுபோல் ரஜினிகாந்த் கருத்துக்கு எதிர் கருத்து தெரிவிக்கப்பட்டது. அது முடிந்து போன விஷயம். ஆனால் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் வகையில் பொது மேடையில் யாரவது பேசினால் அதனை அரசு பார்த்துக் கொண்டிருக்காது நிச்சயமாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: மகளுக்கு 2ஆவது திருமணம்: ரஜினிக்கு பெரியாரின் செயலை நினைவூட்டும் செல்லூர் ராஜு!

Intro:கருத்து தெரிவிப்பதை வைத்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தினால், அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் - அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி
Body:கருத்து தெரிவிப்பதை வைத்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தினால், அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் - அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி

தூத்துக்குடி

பொதுத்தளத்தில் கருத்துத் தெரிவிப்பதை வைத்து சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தினால் அதை பார்த்துக்கொண்டு அரசு சும்மா இருக்காது. கடுமையான நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 403 கிராம ஊராட்சி தலைவர், துணைத்தலைவர்களுக்கான பயிற்சி கூட்டம் இன்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும், இந்த பயிற்சியின் முதல் நாளில் இன்று திருச்செந்தூர், சாத்தான்குளம், ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள 202 கிராம ஊராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர்கள் கலந்து கொண்டனர். தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பயிற்சி கையேட்டை வெளியிட்டு பையிற்சியை தொடங்கி வைத்து பேசுகையில்,
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது,அதன் மூலமாக தலைமைச்செயலகம் முதல் கிராம ஊராட்சி வரை ஒரே நேரத்தில் இணைக்கப்படுகிறது, இதனை பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் துணைத் தலைவர்கள் கிராமத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். தமிழகத்தில் தென் மாவட்டம் குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் சிங்கப்பூராக மாறும் வகையில் 49 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு
ஆலை அமைப்பதற்கான அனுமதியை அளித்துள்ளது, இதன் மூலமாக தூத்துக்குடி மாவட்டம் பல்வேறு வகையில் வளர்ச்சியை பெறும். இதன் மூலமாக தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது வேலையைப் இழந்துள்ள பலபேர் வேலையை பெறுவார்கள்.

கிராம பஞ்சாயத்து தலைவர்கள் அதிக அதிகாரம் படைத்தவர்கள் எனவே கிராம அடிப்படையிலான பிரச்சினைகளுக்கும் அன்றாட பிரச்சனைகளுக்கு தீர்வு காணக்கூடிய நீங்கள் எல்லாவற்றையும் சமாளிக்கும் திறன் பெற்றவர்கள். எனவே அனைவரும் சமம் என்பதை மனதில்கொண்டு அனைவருக்காகவும் பணியாற்ற வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
கிராம ஊராட்சி தலைவர்கள் எந்த நேரமும் எந்த விஷயமும் தன்னிச்சையாக செயல்படுங்கள் யாருடைய கட்டுப்பாட்டிற்குள் செயல்படாதீர்கள்.
கடந்த ஆண்டு தூய்மை பாரதம் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி இதில் அகில இந்திய அளவில் 7 இடத்தைப் பெற்று தூத்துக்குடி மாவட்டம் விருதைப் பெற்றது. தொடர்ந்து வரும் ஆண்டுகளில் முதலிடத்தை பெறும் அளவிற்கு கிராம ஊராட்சி தலைவர்கள் பணியாற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்
பொது தளத்தில் ஒரு கருத்து முன்வைக்கப்படும் பொழுது அதற்கு எதிர் கருத்து கூறப் படுவது வழக்கம். அதுபோல் ரஜினியின் கருத்துக்கு எதிர் கருத்து தெரிவிக்கப்பட்டது. அது முடிந்து போன விஷயம். ஆனால் அதை வைத்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனில் அதை அரசு பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது. நிச்சயமாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
ஒரே மாநிலம் ஒரே ரேஷன் கார்டு திட்டம் தமிழகத்திலேயே முதன்முறையாக தூத்துக்குடி மாவட்டத்தில் பிப்ரவரி 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் எனக் கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.