ETV Bharat / state

'வழக்கறிஞர் போல் வேடமணிந்து பைக் திருடிய பலே கொள்ளையன்' - மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பைக் திருடியவர் கைது

மதுரை: மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் போல் வேடமணிந்து பைக் திருட்டில் ஈடுபட்டு வந்தவரை அண்ணாநகர் காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.

madurai-dist-court-bike-thief-arrested
author img

By

Published : Aug 28, 2019, 4:07 AM IST

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடர்பாக நாள்தோறும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகின்றனர். நீதிமன்ற வளாகத்தில் காலை முதல் மாலை வரை ஏராளமான இருசக்கர வாகனங்கள் நிற்கும். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாவட்ட நீதிமன்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட வழக்கறிஞர்களுக்கு சொந்தமான இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடப்படுவதாக புகார் வந்த வண்ணம் இருந்தது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த அண்ணாநகர் காவல்துறையினர் மாவட்ட நீதிமன்றத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பதிவான கட்சிகள் மூலம் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் நபரை அடையாளம் கண்டு கொண்டனர். இதனையடுத்து திருடனை பிடிபதற்காக காவல்துறையினர் மாறுவேடத்தில் நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்தனர்.

madurai dist court bike thief arrested
வாகனத்திருட்டில் ஈடுபட்டவர்

நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர் போல் நேர்த்தியாக உடையணிந்து வந்த ஒருவர், ஐந்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் அமர்ந்து சாவி போட முயன்றதை பார்த்த காவல்துறையினர், அவரை கையும் களவுமாக பிடித்தனர். மேலும், சிசிடிவி கேமராவில் கிடைத்த காட்சிகளை வைத்து இவர் தான் தொடர் வாகனத்திருட்டில் ஈடுபட்டார் என்பதை உறுதி செய்தனர்.

பின்னர் காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், அவர் வாடிப்பட்டியைச் சேர்ந்த பொன் பெருமாள் என்பதும் பணத்திற்காக வழக்கறிஞரைப்போல் நீதிமன்றத்திற்கு வந்து பத்திற்கும் மேற்பட்ட வாகனங்களை திருடி சென்றதும் தெரியவந்தது. தற்போது திருடப்பட்ட வாகனங்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடர்பாக நாள்தோறும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகின்றனர். நீதிமன்ற வளாகத்தில் காலை முதல் மாலை வரை ஏராளமான இருசக்கர வாகனங்கள் நிற்கும். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாவட்ட நீதிமன்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட வழக்கறிஞர்களுக்கு சொந்தமான இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடப்படுவதாக புகார் வந்த வண்ணம் இருந்தது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த அண்ணாநகர் காவல்துறையினர் மாவட்ட நீதிமன்றத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பதிவான கட்சிகள் மூலம் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் நபரை அடையாளம் கண்டு கொண்டனர். இதனையடுத்து திருடனை பிடிபதற்காக காவல்துறையினர் மாறுவேடத்தில் நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்தனர்.

madurai dist court bike thief arrested
வாகனத்திருட்டில் ஈடுபட்டவர்

நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர் போல் நேர்த்தியாக உடையணிந்து வந்த ஒருவர், ஐந்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் அமர்ந்து சாவி போட முயன்றதை பார்த்த காவல்துறையினர், அவரை கையும் களவுமாக பிடித்தனர். மேலும், சிசிடிவி கேமராவில் கிடைத்த காட்சிகளை வைத்து இவர் தான் தொடர் வாகனத்திருட்டில் ஈடுபட்டார் என்பதை உறுதி செய்தனர்.

பின்னர் காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், அவர் வாடிப்பட்டியைச் சேர்ந்த பொன் பெருமாள் என்பதும் பணத்திற்காக வழக்கறிஞரைப்போல் நீதிமன்றத்திற்கு வந்து பத்திற்கும் மேற்பட்ட வாகனங்களை திருடி சென்றதும் தெரியவந்தது. தற்போது திருடப்பட்ட வாகனங்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:நீதிமன்றத்திலேயே வழக்கறிஞர் போல் வந்து பைக் திருடிய பலே கொள்ளையன்

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த பலே கொள்ளையனை கண்காணித்து மடக்கி பிடித்த காவலர்கள். மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் பாராட்டுBody:நீதிமன்றத்திலேயே வழக்கறிஞர் போல் வந்து பைக் திருடிய பலே கொள்ளையன்

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த பலே கொள்ளையனை கண்காணித்து மடக்கி பிடித்த காவலர்கள். மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் பாராட்டு

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடர்பாக நாள்தோறும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகை தருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாவட்ட நீதிமன்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட வழக்கறிஞர்களுக்கு சொந்தமான இரு சக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடப்படுவதாக புகார் வந்தவண்ணம் இருந்தன.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த அண்ணாநகர் போலீசார் மாவட்ட நீதிமன்றத்தில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு ஆய்வுகள் மேற்கொண்டனர்.

இரு சக்கர வாகனத்தை திருடி செல்லும் நபரை அடையாளம் கண்டு திருடனை பிடிபதற்காக காவல்துறை மற்றும் உளவுத்துறையினர் மாறுவேடத்தில் காத்திருந்தனர்.

இந்நிலையில் இன்று மாலை மாவட்ட நீதிமன்றத்திற்கு டிப்டாப்-ஆக உடையணிந்து ஒருவர் 5-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களில் அமர்ந்து சாவி போட முயன்றதை பார்த்த உளவுத்துறை போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர். அந்நபர் சிசிடிவி காட்சியில் உள்ளதை உறுதிப்படுத்தினர்.

அவரை பிடிக்க முயன்றபோது தப்பியோடிய அவரை வளைத்து பிடித்தனர். அதனை தொடர்ந்து விசாரணை நடத்தியதில் மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த பொன்பெருமாள் என்பதும் சைக்கிள் மெக்கானிக்காக இருந்ததும், பணத்திற்காக வழக்கறிஞர்களை போல வந்து நீதிமன்றத்தில் 10-க்கும் மேற்பட்ட வாகனங்களை திருடி சென்றதையும் ஒப்புக்கொண்டார்.

அந்த நபர் அண்ணாநகர் போலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு அவரிடம் இருந்து கொள்ளையடிக்கபட்ட வாகனங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு மிகுந்த நீதிமன்றத்தில் நடைபெற்ற பைக் கொள்கையை அரங்கேற்றிய திருடனை பொறிவைத்து பிடித்த காவல்துறையினருக்கு வழக்கறிஞர்களும் , பொதுமக்களும் பாராட்டுகளை தெரிவித்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.