ETV Bharat / city

தரமற்ற சாலையைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்!

author img

By

Published : Nov 15, 2019, 6:11 PM IST

ஈரோடு: கெடாரையிலிருந்து பிலியம்பாளையம் செல்லும் சாலை தரமற்ற முறையில் அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறி 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தரமற்ற சாலையைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் பேரூராட்சிக்குட்பட்ட கெடாரையிலிருந்து பிலியம்பாளையம் செல்லும் தார்ச் சாலை தற்போது புதுப்பிக்கப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட சாலையில் சரியான கலவையில் தார், ஜல்லி கற்கள் சேர்க்கப்படவில்லை என்றும் அதனால் தற்போதே தார் சாலை பழுதடைந்துள்ளதாகவும் கூறி இப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் கெடாரை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நம்பியூர் காவல் துறையினர், நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, சாலைப் பணி ஒப்பந்தக்காரர் ஒப்பந்தத்துக்கு எடுத்த தொகையிலிருந்து பாதியளவுகூட செலவழிக்கவில்லை எனவும் தரமற்ற தார்ச் சாலையை மீண்டும் புதுப்பிக்கவேண்டும் எனவும் கோரிக்கைவைத்தனர்.

தரமற்ற சாலையைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

அதனைத் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட சாலையை ஆய்வு செய்து அரசு நிர்ணயித்ததைவிடத் தரமற்ற முறையில் போடப்பட்டிருந்தால் புதிய தார் சாலை அமைக்கவும், அபராதம் விதிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இரிடியம் மோசடி வழக்கு - 6 பேர் கைது!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் பேரூராட்சிக்குட்பட்ட கெடாரையிலிருந்து பிலியம்பாளையம் செல்லும் தார்ச் சாலை தற்போது புதுப்பிக்கப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட சாலையில் சரியான கலவையில் தார், ஜல்லி கற்கள் சேர்க்கப்படவில்லை என்றும் அதனால் தற்போதே தார் சாலை பழுதடைந்துள்ளதாகவும் கூறி இப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் கெடாரை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நம்பியூர் காவல் துறையினர், நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, சாலைப் பணி ஒப்பந்தக்காரர் ஒப்பந்தத்துக்கு எடுத்த தொகையிலிருந்து பாதியளவுகூட செலவழிக்கவில்லை எனவும் தரமற்ற தார்ச் சாலையை மீண்டும் புதுப்பிக்கவேண்டும் எனவும் கோரிக்கைவைத்தனர்.

தரமற்ற சாலையைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

அதனைத் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட சாலையை ஆய்வு செய்து அரசு நிர்ணயித்ததைவிடத் தரமற்ற முறையில் போடப்பட்டிருந்தால் புதிய தார் சாலை அமைக்கவும், அபராதம் விதிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இரிடியம் மோசடி வழக்கு - 6 பேர் கைது!

Intro:Body:tn_erd_06_sathy_salai_marial_vis_tn10009

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் பேரூராட்சியில் கெடாரையிலிருந்து பிலியம்பாளையம் செல்லும் சாலை தரமற்ற முறையில் அமைக்கப்பட்டிருப்பதாக கூறி 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட முயன்றதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் பொதுமக்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து போரட்டம் கைவிடப்பட்டது..

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் பேரூராட்சிக்குட்பட்ட கெடாரையிலிருந்து பிலியம்பாளையம் செல்லும் தார் சாலை தற்போது புதுப்பிக்கப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட சாலையில் சரியான கலவையில் தார் மற்றும் ஜல்லி கற்கள் சேர்கப்படவில்லை என்றும் அதனால் தற்போதே தார் சாலை பழுதடைந்துள்ளதாகவும் கூறி இப்பகுதி பொதுமக்கள் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கெடாரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நம்பியூர் காவல்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது தார் சாலை புதுப்பிக்கப்பட்டு இரண்டு நாட்களில் சாலை பழுதடைந்து கற்கள் பெயற்ந்து உள்ளதாகவும் தார் சாலை அமைத்த குத்தகைதாரர் குத்தகைக்கு எடுத்த தொகையிலிருந்து பாதியளவுகூட செலவழிக்கவில்லை எனவும் தரமற்ற தார் சாலையை மீண்டும் புதுப்பிக்கவேண்டும் என்றும் கோரிக்கைவைத்தனர். அதனைத்தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட சாலையை ஆய்வு செய்து அரசு நிர்ணயத்ததைவிட தரமற்ற முறையில் போடப்பட்டிருந்தால் புதிய தார் சாலை அமைக்கவும் அபராதம் விதிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தைக்கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் கெடாரை பிலியம்பாளையம் சாலையில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து ஏற்பட்டதுடன் பரபரப்பும் ஏற்பட்டது. ஒவ்வொரு அரசு திட்டங்களையும் செயல்படுத்தும் போது அதற்கான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டால் இவ்வாறு தரமற்ற முறையில் குத்தகைதாரர்hகள் செயல்படமாட்டார்கள் என்றும் டெண்டர் விடும் தொகைக்கும் அதில் குறிப்பிட்டுள்ள முறைகளின் அடிப்படையில் பணி நடைபெறுகிறதா என்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு கண்காணிக்கவேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.